Maalai News
விளையாட்டு

சர்வதேச ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி: இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கம் வென்ற கோவை மாணவன்; உற்சாக வரவேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய  ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத்- யசோதா ஆகியோரின் மகன் பிரணவ். சிறு வயது முதலே ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய, சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள இவர்,கடந்த 2018 முதல் சர்வதேச அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற  தென்கிழக்கு ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த பிரணவ் கலந்து கொண்டார். இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சீனா, மங்கோலியா, சிங்கப்பூர்  உட்பட 11 நாடுகளில் இருந்து  சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பங்கேற்ற பிரணவ் அருண் பிரசாத் “ஜூனியர் ஏ” பிரிவில் 17 முதல்  19 வயது வரையிலான பிரிவில் 500, 1000, 1500 மீட்டர் என மூன்று பிரிவுகளிலும் மூன்றாம் இடம் பிடித்து மூன்று  வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவிலான வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவன் பிரணவிற்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

விமான நிலையத்தில் அவருக்கு சால்வை  அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவரது பெற்றோர்கள்,  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரணவ், தமக்கு ஆதரவும் உற்சாகமும் வழங்கி தம்மை வழி அனுப்பி வைத்த தமிழ்நாடு துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார். மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ள பிரணவ்  தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு  விளையாடிய ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை-2024 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

Administrator

சச்சின், கவாஸ்கரை விஞ்சிய சர்பராஸ் கான்… வரலாற்றுச் சாதனை படைத்து அசத்தல்

Administrator

யு-19 டெஸ்ட்டில் சதம் அடித்து மிரட்டிய 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

Administrator

Leave a Comment