வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துரை சார்பில் வேலூர் தொரப்பாடியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது
இந்த முகாமினை வேலூர் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் என்.கோபி கிருஷ்ணா அவர்கள் முகாமினை தொடங்கி வைத்தார் வேலூர் பன்முக மருத்துவமனை பிரதம மருத்துவர் பாண்டியன் வேலூர் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் கோ கோ . அந்துவன் முன்னிலை வகித்தனர் கால்நடை பன்முக மருத்துவர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் தினேஷ் குமார் கவிப்பிரியா இமயரசி ஆகியோர் வெறி நோய் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்

